search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள முதல்வர் பினராயி விஜயன்"

    கேரளாவில் மீன் விற்று படித்துக்கொண்டிருக்கும் மாணவி ஹனன், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். #HananHamid #PinarayiVijayan #Cyberbullying
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் என்ற 21 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக மீன் விற்று தனது அன்றாட செலவை சமாளிப்பதுடன், குடும்ப செலவிற்கும் உதவுகிறார். இவரது வாழ்க்கை தொடர்பாக மாத்ருபூமி நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியானது. வீடியோவும் வெளியானது. இந்த கட்டுரை மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரவிய நிலையில், பலரது ஆதரவையும் பாராட்டையும் பெற்றார். சிலர் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.



    அதேசமயம் ஒரு சிலர் இதை போலி செய்தி என்று கூறி தாறுமாறாக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். பின்னர் அவர் படித்த கல்லூரியின் முதல்வரும், தெரிந்தவர்களும் ஹனன் குறித்து நாளிதழில் வந்த செய்தி உண்மைதான் என்று ஆதரவுக் கரம் நீட்டினர். இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்ற நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோரும் மாணவிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், மாணவி ஹனன் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, மாணவிக்கு அறிவுரைகள் வழங்கிய முதல்வர், அரசு சார்பில் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறும்போது, “அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஹனனை சந்தித்தேன். அவளது சிரித்த முகத்தைப் பார்த்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். யாருடைய உதவியும் இன்றி படிப்பதற்கு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியான பிறகு, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

    மாணவிக்கு தேவையான உதவிகள் செய்ய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தவறாக விமர்சனம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே மாணவி என்னை சந்தித்தார். அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். #HananHamid #PinarayiVijayan #Cyberbullying
    கேரள மாநிலத்தையும் மாநிலத்தின் கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். #PinarayiVijayan #PMModi
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்திற்கான ரேஷன் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேரள அரசு சார்பில் பிரதமர் அலுவலகத்தில் கேட்கப்பட்டிருந்தது.

    ஆனால், பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. அதற்குப் பதிலாக மத்திய உணவுத்துறை மந்திரி  ராம் விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பினராயி விஜயன், பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். கேரள மாநிலத்தையும் கேரளாவின் கோரிக்கைகளையும் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



    ‘நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. கேரளாவின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிப்பது, மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் சரிவு ஏற்பட வழிவகுத்துள்ளது. பிரதமரை பார்த்து எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கச் சென்றால், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

    கூட்டாட்சி அமைப்பில் திருப்தியடைந்த மாநிலமும் வலுவான மத்திய அரசும் நமக்கு தேவை. மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பதில் இப்போது இருப்பது போல் முந்தைய அரசுகள் மோசமாக இருந்தது இல்லை.’ என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். #PinarayiVijayan #PMModi

    ×